Saturday, July 6, 2024
Home » தேர்தலில் தோல்வி அடைந்ததால் விரக்தி அதிமுக வேட்பாளரின் கணவர் தற்கொலை: போலீசுக்கு தெரியாமல் சடலம் எரிப்பு

தேர்தலில் தோல்வி அடைந்ததால் விரக்தி அதிமுக வேட்பாளரின் கணவர் தற்கொலை: போலீசுக்கு தெரியாமல் சடலம் எரிப்பு

by kannappan

சத்தியமங்கலம்: 
உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்த அதிமுக வேட்பாளரின்
கணவர் தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே
அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி
பெற்றுள்ளது. மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 9 வார்டிலும், அதிமுக 2
வார்டிலும், சுயேச்சைகள் 4 வார்டிலும் வெற்றி பெற்றனர். 12வது வார்டில்
அதிமுக சார்பில் போட்டியிட்ட பெரியூர் பகுதியை சேர்ந்த துரைசாமி என்பவரது
மனைவி சகுந்தலா, திமுக வேட்பாளர் மகேஸ்வரியிடம் தோல்வி அடைந்தார். திமுக
வேட்பாளர் மகேஸ்வரி 468 வாக்குகள் பெற்ற நிலையில் அதிமுக வேட்பாளர்
சகுந்தலா 113 வாக்குகள் மட்டுமே பெற்றார்.இதனால் மனமுடைந்த
சகுந்தலாவின் கணவரும், அதிமுக பிரமுகருமான துரைசாமி பூச்சி மருந்து
குடித்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு
அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். அவரது உடலை
கொண்டு வந்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தெரியாமல் எரித்ததால் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது.  …

You may also like

Leave a Comment

1 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi