தேயிலை தோட்டத்தில் உலா வரும் காட்டு யானை: கிராம மக்கள் அச்சம்

 

கோத்தகிரி, ஜூன் 20: கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பானை தேயிலை தோட்டத்தில் உலா வரும் ஒற்றை காட்டு யானையால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கோத்தகிரி அருகே வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த ஒற்றை காட்டு யானை குடியிருப்புகளுக்கு அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ளது. குஞ்சப்பனை சுற்று வட்டார கிராமங்களில் பலாப்பழ சீசன் துவங்கியுள்ள நிலையில், பழங்களை உண்பதற்காக காட்டு யானைகள் சமவெளி பகுதியில் இருந்து மலை கிராமப்பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கம்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி