தேமுதிக பொதுக்கூட்டம்

தர்மபுரி : தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா மற்றும் 19ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, நேற்று தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் குமார் வரவேற்றார். மேற்கு மாவட்ட செயலாளர் விஜயசங்கர் முன்னிலை வைத்தார். கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ அழகாபுரம் மோகன்ராஜ் பேசினார். கூட்டத்தில் புல்லட் மாரிமுத்து, தர்மபுரி ஒன்றிய துணை சேர்மன் தம்பி ஜெய்சங்கர், மாவட்ட அவை தலைவர்கள் தங்கவேல், உதயகுமார், மாவட்ட பொருளாளர்கள் சீனிவாசன், ராமச்சந்திரன், மாநில தொழிற்சங்க துணை செயலாளர் விஜய் வெங்கடேஷ், மாவட்ட துணை செயலாளர் சுரேஷ், நகர செயலாளர் தேவ தேவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை