தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, ஜூலை 26: தர்மபுரி மாவட்ட தேமுதிக சார்பில், பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் மாநில அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் குமார் வரவேற்றார். மேற்கு மாவட்ட செயலாளர் விஜய்சங்கர் முன்னிலை வகித்தார். மாநில தொழிற்சங்க துணைத் தலைவர் விஜய் வெங்கடேஷ் உரையாற்றினார். இதில் மாவட்ட அவை தலைவர்கள் தங்கவேல், உதயகுமார், மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், மாவட்டத் துணை செயலாளர்கள் சுரேஷ், பெரியசாமி, தங்கதுரை, பொன்மொழி, மணி முனியப்பன், கிருஷ்ணன், நாகராஜ், இந்திராணி மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர செயலாளர்கள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். நகர செயலாளர் தேவன் நன்றி கூறினார்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி