தேனீக்கள் கொட்டி 10 பேர் படுகாயம்

 

ராசிபுரம், ஜூன் 3: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த அரசபாளையம் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள ஆலமரத்தில் தேனீக்கள் கூடு கட்டி இருந்துள்ளது. திடீரென கூடு கலைந்தால், தேனீக்கள் சாலையில் சென்ற நபர்கள், ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற நபர்களை கொட்டியது. இதில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை