Monday, July 1, 2024
Home » தேனி நாடார் சரசுவதி கல்லூரியில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்: நாளை நடக்கிறது

தேனி நாடார் சரசுவதி கல்லூரியில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்: நாளை நடக்கிறது

by Ranjith

 

தேனி, ஜூன் 9: தமிழ்நாடு அரசின் ஸ்கில் டெவலப்மெண்ட் கார்ப்பரேசன் மற்றும் நான் முதல்வன் இயக்கம் இணைந்து பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகளை கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு அளித்து வருகிறது. இப்பயிற்சிகளின் அடிப்படையில் தேனி மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நாளை (10ம் தேதி) தேனி நாடார் சரசுவதி கலை, அறிவியல் கல்லூரியில் நடக்க உள்ளது. இம்முகாமில் 50க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான நபர்களை பணியமர்த்த உள்ளனர்.

இம்முகாமில் தேனி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து கல்லூரிகளின் மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ, மாணவியர் நான் முதல்வன் திட்ட மேலாளர் 9952878418 என்ற எண்ணிலோ, தேனி நாடார் சரசுவதி கல்லூரி பணிஅமைப்பு அலுவலர் 90951 00259 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

You may also like

Leave a Comment

5 + eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi