தேனி, ஜூலை 1: தேனி நகர் ஜிஎச் ரோட்டில் குடியிருக்கும் கோபால் மகன் தங்கப்பாண்டியன்(32). இவர் நேற்று தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் கார் நிற்கக்கூடிய போர்டிகோ அருகில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அப்பகுதியில் பாதுகாப்புக்கு இருந்த போலீசார் விரைந்து சென்று தீக்குளிக்க முயன்ற வாலிபரை தடுத்தனர். இதனையடுத்து, அவரிடம் விசாரித்தபோது, கந்து வட்டிக் கொடுமையால் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்துள்ளேன். ஆனாலும், கந்து வட்டிக் கொடுத்தவர் தொடர்ந்து நெருக்கடி ஏற்படுத்தி வருகிறார். அதனால், வேறு வழியின்றி தீக்குளிக்க முடிவெடுத்தேன் என கூறியுள்ளார். இதனையடுத்து தேனி போலீசார் தீக்குளிக்க முயன்ற வாலிபரை தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.