தேனி ஆர்டிஓவுக்கு தலைமைச் செயலர் பாராட்டு சான்று

 

தேனி, செப். 27: கொடிநாள் வசூலில் சாதனை படைத்த தேனி வட்டார போக்குவரத்து அலுவலருக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரின் பாராட்டுச் சான்றிதழை கலெக்டர் வழங்கினார். தேனி வட்டார போக்குவரத்து அலுவலராக செல்வக்குமார் உள்ளார்.இவர் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் படைவீரர் கொடிநாள் வசூலினை அதிக அளவில் சேமித்து கொடுத்தார். இச்செயலை பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரின் பாராட்டு சான்றிதழ் தேனி வட்டார போக்குவரத்து அலுவலருக்கு அனுப்பப்பட்டது. இப்பாராட்டுச் சான்றிதழை கலெக்டர் ஷஜீவனா தேனி வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வகுமாருக்கு நேரில் வழங்கி பாராட்டினார்.

Related posts

ஆர்வத்துடன் மீன்பிடிக்கும் இளைஞர்கள்

நென்மேனி சாலையில் ரயில்வே மேம்பால பணி விரைவில் தொடங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு

உணவுகளை தயாரிக்க சுத்தமான தண்ணீர் பயன்படுத்த வேண்டும்: உணவகங்களுக்கு அறிவுறுத்தல்