தேனி அருகே நள்ளிரவில் தீவிபத்து கம்ப்யூட்டர் சென்டர், 2 ஓட்டல்கள் எரிந்து நாசம்

தேனி: தேனி அருகே தேவதானப்பட்டியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் கம்ப்யூட்டர் சென்டர், 2 ஓட்டல்கள் எரிந்து நாசமாகின. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எதிரே மெயின் ரோட்டில் கம்ப்யூட்டர் சென்டர், ஓட்டல்கள், மளிகை கடை, பெட்டிக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள சங்கர் (42) என்பவரது கம்ப்யூட்டர் சென்டர், முத்துரங்கன், வடிவேல் ஆகியோருக்கு சொந்தமான ஓட்டல் நேற்று நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென அருகில் உள்ள கடைகளுக்கு பரவ ஆரம்பித்தது.போலீஸ் ஸ்டேஷன் எதிரே என்பதால் தேவதானப்பட்டி போலீசார் உடனடியாக பெரியகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பெரியகுளம் தீயணைப்பு  வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 1 மணிநேரம் போராடி தீயை அனைத்தனர்.  இருப்பினும் கம்ப்யூட்டர் சென்டர், 2 ஓட்டல்கள் தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்திற்கான காரணம் குறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்….

Related posts

பார்வையாளர்களுக்கு பிரத்யேக ஏற்பாடுகள்; சிறையில் செந்தில் பாலாஜிக்கு சிறப்பு வசதிகள் தரப்படவில்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி

சவூதியின் ஜெட்டா நகருக்கு வாரத்தில் 2 நாள் நேரடி விமான சேவை: சென்னையில் நேற்று துவங்கியது

மின்வாரிய அலுவலகத்தில் ரூ.3,000 லஞ்சம் பெற்ற வழக்கில் போர்மேனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை!