தேனியில் இன்று வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

தேனி, செப். 13: தேனியில் இன்று வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். தேனி வழக்கறிஞர் சங்க தலைவர் சந்தானகிருஷ்ணன் கூறியதாவது : மதுரை வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள் பாலமுருகன், குமரன் ஆகியோர் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே எதிர்தரப்பினரால் தாக்கப்பட்டதை கண்டித்தும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றக்கோரியும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இன்று (13ம்தேதி) ஒரு நாள் மட்டும் நீதிமன்ற பணியில் இருந்து தேனி வழக்கறிஞர்கள் சங்க வழக்கறிஞர்கள் விலகி இருக்க உள்ளதாக தெரிவித்தார்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்