தேனியில் ஆர்ப்பாட்டம்

 

தேனி, ஜூலை 23: கள்ளர், மறவர், அகமுடையார் உள்ளிட்ட மூன்று இனத்தையும் சேர்த்து தேவரினம் என அறிவிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்த வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முனீஸ்வரன் தலைமை வகித்தார்.

மாவட்ட பொது செயலாளர் மணி தேவர், மாவட்டச் செயலாளர் மகேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் அஜித்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழ்நாடு அரசு கள்ளர், மறவர், அகமுடையார் உள்ளிட்ட முக்குலத்தோரை ஒருங்கிணைத்து தேவரினம் என அரசாணை வெளியிட்டதை அமல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி