தேசிய விருது பெற்ற வங்க இயக்குனர் மரணம்

சென்னை: 2 முறை தேசிய விருது பெற்ற வங்காள மொழி இயக்குனர் புத்ததேவ் தாஸ் குப்தா. பாக் பகதூர், தஹதர் கத, சரச்சார், உத்தாரா உள்ளிட்ட பல பெங்காலி படங்களை இயக்கியவர். 2000வது ஆண்டு உத்தாரா படத்திற்காகவும், 2005ம் ஆண்டு ஸ்வாப்னர் டின் என்ற படத்திற்காகவும் தேசிய விருது பெற்றார்.  77 வயதான புத்ததேவ் தாஸ் குப்தா,  சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார். சிறுநீரக பிரச்னை காரணமாக டயாலசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்திருந்த நிலையில், நேற்று தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது.  அவருக்கு பெங்காலி திரையுலக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘மேற்கு வங்க திரையுலகிற்கு புத்ததேவ் தாஸ் குப்தாவின் மரணம் பேரிழப்பு’ என்று தெரிவித்துள்ளார்….

Related posts

கள்ளக்காதல் விவகாரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பணி நீக்கத்தை எதிர்த்து முன்னாள் உதவி பேராசிரியர் மனு: கலாஷேத்ரா அறக்கட்டளை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம்; சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை