தேசிய வாக்காளர் தின வினாடி-வினா போட்டி

 

ராமநாதபுரம், ஜன.19: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி நாளை மறுநாள் நடக்க உள்ளது. மாணவர்கள் பங்கேற்க கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கில் 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு SVEEP திட்டத்தின்படி மாநில அளவிலான பொதுமக்களுக்கான வினாடி,வினா போட்டி 21.1.2024 காலை 11 மணி முதல் 11.15 மணி வரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் ‘https//www.erolls.tn.gov.in/Quiz2024\” என்ற இணையதள முகவரியில் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்யலாம். இப்போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் விவரங்களை மேற்காணும் இணையதளத்தில் 18.1.2024 மற்றும் 19.1.2024 ஆகிய நாட்களில் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர்.

இதில் கலந்து கொள்வதற்கு பங்கேற்பாளரின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியானது கட்டாயமாக உள்ளீடு செய்யப்பட வேண்டும். “இந்தியாவில் தேர்தல்கள்\” என்ற தலைப்பின் அடிப்படையில் இந்த போட்டியானது நடைபெறும். மேலும் விவரங்களுக்கு இணையதளம் : https//www.erolls.tn.gov.in/Quiz2024 மற்றும் மாநில உதவி மைய எண்: 1800 – 4252 – 1950, மாவட்ட மைய உதவி எண்:1950 என்ற உதவி எண்களை தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு தெரிவித்துள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை