தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்.: டெல்லி நீதிமன்றம்

டெல்லி: தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா அவர் பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கியுள்ளார். முதலாவதாக, பங்குச் சந்தை பற்றிய ரகசியத் தகவல்கள் இமயமலைச் சாமியார் ஒருவருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது என்று செபி உத்தரவில் கூறியுள்ளது.மேலும், தேசிய பங்குச் சந்தை குழும அதிகாரியாக ஆனந்த் சுப்ரமணியனை நியமித்ததிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக செபி தெரிவித்தது. இதையடுத்து சித்ரா ராமகிருஷ்ணா விசாரணை வளையத்தில் சிக்கினார். அவரிடம் சிபிஐ தனது விசாரணையை நடத்திவருகிறது. இந்தநிலையில் தேசிய பங்குச்சந்தையின் ரகசிய தகவல்களை கசியவிட்டதாக பதிவான வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி டெல்லி நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. …

Related posts

இந்திய பங்குச்சந்தையில் கடும் சரிவு முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.9.78 லட்சம் கோடி இழப்பு

சாவர்க்கர் மாட்டிறைச்சி சாப்பிட்டவர்: கர்நாடக அமைச்சர் தினேஷ்குண்டுராவ் பேச்சு

நவராத்திரி விழாவை முன்னிட்டு உச்ச நீதிமன்ற கேண்டீனில் அசைவத்திற்கு தடை: வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு