குளத்தூர், மார்ச்2: குளத்தூர் அருகே பனையூர் இந்து நாடார் நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு மாணவர்கள் 19 பேர் இந்திய அளவில் நடந்த தேசிய திறனாய்வு தேர்வில் கலந்து கொண்டு தேர்வெழுதினர். இதில் இப்பள்ளி மாணவர் அபிஷேக் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை தேடிதந்துள்ளார். வெற்றி பெற்ற மாணவன், பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியை மரியஅனிதா மற்றும் அனைத்து ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.