தேசிய கடற்கரை டெக்பால் போட்டி தமிழக அணி சாம்பியன்

சென்னை: மாமல்லபுரத்தில் நடந்த தேசிய அளவிலான கடற்கரை டெக்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. தமிழ்நாடு டெக்பால் சங்கம் சார்பில், இந்திய டெக்பால் பெடரேஷன் ஆதரவுடன் தேசிய அளவிலான முதலாவது டெக்பால் சாம்பியன்ஷிப் போட்டி, மாமல்லபுரம் சுற்றுலாக் கழக விடுதி வளாக மைதானத்தில் நடந்தது. தமிழகம், கேரளா, கர்நாடகா உள்பட 18 மாநிலங்களில் இருந்து 170 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 4 நாட்கள் நடந்த இந்த தொடரில் நேற்று நடந்த இறுதிப் போட்டியின் முடிவில், தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது. 2ம் இடத்தை மஹாராஷ்டிரா அணியும், 3ம் இடத்தை குஜராத் அணியும் வென்றன. இந்த போட்டியில் முதலிடம் பிடித்த தமிழக அணி, அடுத்த ஆண்டு சீனாவில் நடக்கும் உலக அளவிலான கடற்கரை டெக்பால் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது….

Related posts

3 குழந்தைகளுக்கு அரிய, சிக்கலான அறுவை சிகிச்சை: எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை சாதனை

மறுசீரமைப்பு பணிகளுக்காக அடுக்குமாடி குடியிருப்புகளில் தற்காலிக மின் இணைப்பு வழங்கக்கூடாது: மின்வாரியம் உத்தரவு

கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை 14ம் தேதிக்குள் அகற்றாவிடில் அபராதம் விதிக்க நேரிடும்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை