தேசிய அளவிலான யோகாசன போட்டி

 

விருதுநகர், அக்.16: விருதுநகர் கச்சேரி சாலையில் உள்ள பள்ளியில் நேற்று தேசிய அளவிலான யோகாசனப் போட்டி நடைபெற்றது. இதில் 6 வயது முதல் 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் என ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மொத்தம் 22 பிரிவுகளாக வயது வாரியாக இப்போட்டிகள் நடைபெற்றன. இதில், டெல்லி, ஆந்திரா, தெலுங்கானா, உத்திரபிரதேசம், உத்ரகாண்ட், புதுச்சேரி, மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

யோகாசனப் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பல்வேறு விதமான யோகசனங்களை பார்வையாளர்கள் முன்பு செய்து காண்பித்து அசத்தினர். நடுவர்களாக டாக்டர் பாலசந்தர், அருள்நிதி, ரேணுராம்பாலா ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கே.வி.எஸ்.ஸ்போர்ட்ஸ் அகாடமி அமைப்பினர் செய்திருந்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு