ஓமலூர்: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் ஓமலூரில் உள்ள அலுவலகத்தில், நேற்று அளித்த பேட்டி: ஒவ்வொரு கட்சியும், அவரவர் கட்சியினருக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தான் விருப்பப்படும். கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் குறிப்பிட்ட அளவு இடங்களை ஒதுக்க முடியும். ஆனால், உள்ளாட்சி தேர்தலில் எங்கள் கட்சியில் நிறைய பேருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் ஆசைப்படும். இதனால் உரிய இடங்களை ஒதுக்கீடு செய்வது பெரும் சிரமம். இந்த வகையில் தான் அதிமுகவுக்கும், பாஜவுக்கும் ஏற்பட்ட எண்ணத்தால், கூட்டணியில் உடன்பாடு ஏற்படாமல் போனது. இப்போதைய தேர்தலில் நாங்களும், அவர்களும் தனியாக நிற்கிறோம். எதிர்காலத்தில் கூட்டணி வருமா? என்பது, அப்போதைய தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம். கூட்டணியை விட்டு பாஜக வெளியேறி விட்டது என்ற வார்த்தையை யாரும் பயன்படுத்த வேண்டாம். அவர்களது கட்சியினருக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதால், தனித்து போட்டியிடுகின்றனர். தேசிய அரசியலை பொறுத்தவரை, தமிழகம் வளர்ச்சி பெறும் என்பதற்காக, பாஜவுடன் எங்கள் கூட்டணியை தொடர்வோம். அதிமுக எம் எல்ஏக்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளார். அதோடு அந்த பிரச்னை முடிந்தது. தவறு செய்யாத மனிதரே கிடையாது. ஆனால் தவறு செய்தவர்கள், அதை எண்ணி வருத்தம் தெரிவித்தால், பெருந்தன்மையாடு ஏற்றுக்கொள்ள கூடிய மனப்பக்குவம் வேண்டும். அந்த மனப்பக்குவம் எங்களுக்கு இருக்கிறது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்….
தேசிய அரசியலில் பாஜவுடன் கூட்டணி தொடரும் அதிக இடங்களில் போட்டியிட நினைத்ததால் இந்த தேர்தலில் உடன்பாடு ஏற்படவில்லை: சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
previous post