தேங்காய்ப்பால் மீன் குழம்பு

எப்படிச் செய்வது?அரைக்க கொடுத்த பொருட்களை விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளியை கரைத்து வடித்து அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வடகத்தை போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு கரைத்த புளி கலவை, அரைத்த விழுது, 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் மீன் துண்டுகளை போட்டு மீன் வெந்ததும் தேங்காய்ப்பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி சாதம், இட்லி, தோசையுடன் பரிமாறவும்.

Related posts

சென்செக்ஸ் 379 புள்ளிகள் உயர்ந்து 79,855 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம்..!!

சிறுகதை-உறவு முத்திரை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,240க்கு விற்பனை..!!