தெற்கு பகவதிபுரத்தில் அங்கன்வாடி திறப்பு விழா

அஞ்சுகிராமம், அக். 19: அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தெற்கு பகவதிபுரத்தில் புதிய அங்கன்வாடி அமைக்க பொதுமக்கள் விஜய்வசந்த் எம்.பி யிடம் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விஜய் வசந்த் எம்.பி தனது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.14.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். தொடர்ந்து பணிகள் தொடங்கி, முடிவடைந்தது. இதனையடுத்து திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார தலைவர் காலபெருமாள் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி. உதயம், அழகப்பபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் அனிற்றா ஆண்ட்ரூஸ், துணைத் தலைவர் ஆண்ட்ரூஸ்மணி, கவுன்சிலர் ராதா தாணுமூர்த்தி, கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி இளைஞரணி தலைவர் அருண் டிசாசோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக விஜய் வசந்த் எம்.பி கலந்து கொண்டு புதிய அங்கன்வாடியை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து சுமார் 100 ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். இதில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் தங்கம் நடேசன், மயிலாடி நகர காங்கிரஸ் தலைவர் நடேசன், நகர பொருளாளர் செல்வன், முன்னாள் ஊர் பொருளாளர் தாணுமூர்த்தி, கவுன்சிலர்கள் கிறிஸ்டோபர் முத்தரசு, ஜஸ்டின், பிரகாஷ், கிறிஸ்டி, ஜார்ஜ்மலர்கொடி, அஞ்சுகிராமம் கவுன்சிலர் வீடியோகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்