அருப்புக்கோட்டை, ஜூன் 22: அருப்புக்கோட்டையில் கூட்டமாக திரியும் தெருநாய்கள் ரோட்டில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தி கடித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அருப்புக்கோட்டை பந்தல்குடி ரோடு திருச்சுழி ரோடு ஆகிய பகுதிகளில் நேற்று நடந்து சென்ற மாரிமுத்து(43), லட்சுமணன்(26), திவாகர்(18), முனியசாமி(39), பெருமாள்(58), கருப்பசாமி(76), சதாசிவம், வீரபாண்டியன் ஆகிய 8 பேரை தெருநாய் கடித்தது.
இவர்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தற்போது நகரில் தெரு நாய் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே நகராட்சி நிர்வாகம் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கைஎடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.