தென்பெண்ணை ஆற்றில் பாதுகாப்பு ஒத்திகை

போச்சம்பள்ளி, செப்.4: போச்சம்பள்ளி அருகே மஞ்சமேடு தென்பெண்ணையாறு உள்ளது. இங்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் புனித நீராடி செல்வது வழக்கம். இந்த பகுதியில் போச்சம்பள்ளி தீயணைப்பு துறை சார்பில் வெள்ள தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

அலுவலர் சக்திவேல் தலைமையில் வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, ஆறு, குளம், அணை ஆகியவற்றில் பொதுமக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆற்றில் சிக்குபவர்களை எவ்வாறு பாதுகாப்புடன் மீட்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

Related posts

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் புதிய பாலப்பணியை அதிகாரிகள் ஆய்வு

போதை மாத்திரை விற்ற ரவுடி மீது குண்டாஸ்

கர்நாடகா தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை நிலுவையின்றி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை