தென்தமிழக மாவட்டங்கள் நீலகிரி, திருப்பூரில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தென்தமிழக மாவட்டங்கள், நீலகிரி, கோவை, திருப்பூரில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. கோவை சின்கோனாவில் 3, அரிமளம், சின்னக்கல்லாறு, சிவகாசி, வால்பாறையில் தலா 2 செ.மீ. மழை பதிவானது. இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி  மற்றும்  வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுளது. குறிப்பாக தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 29-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி  இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில்,  அதிகபட்சமாக சின்கோனா (கோயம்புத்தூர்) 3 செண்டி மீட்டர் மழையும், அரிமளம் (புதுக்கோட்டை), சின்னக்கல்லாறு (கோவை), சிவகாசி (விருதுநகர்), வால்பாறை (கோவை) தலா 2 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுளது….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை