தொண்டாமுத்தூர், அக்.2: பிலிப்பைன்ஸ் நாட்டின் மனிலா நகரில் தென் கிழக்கு ஆசிய ஜஸ் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இதில் கோவை சின்னதடாகத்தை சேர்ந்த பிரணவ் அருண்பிரசாத இந்திய அணி சார்பில் ஜுனியர் ஏ பிரிவில் (17-19 வயது பிரிவு) கலந்துகொண்டார். அவர் தனது வயது பிரிவில் 500, 1000 மற்றும் 1500 மீட்டர் போட்டிகளில் முறையே 3ம் இடம் பிடித்து 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்திய அணியில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது . இவரை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி போட்டிகளில் பங்கேற்பதற்குண்டான ரூ.1,95,000ஐ தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கினார். நேற்று கோவை திரும்பிய பிரணவ் அருண் பிரசாத்துக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.