தென்காசியில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

 

தென்காசி,ஜூன் 3:தென்காசியில் இஸ்ரேலை கண்டித்து மார்க்சிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. புதிய பேருந்து நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார். திமுக நகர செயலாளர் சாதிர், நகர்மன்ற துணைத்தலைவர் கேஎன்எல் சுப்பையா, இந்திய கம்யூனிஸ்ட் சுப்பையா, கிட்டப்பா, தமுமுக மாவட்ட தலைவர் யாக்கூப், விசிக மண்டல துணை செயலாளர் சித்திக், முஸ்லீம் லீக் மாநில செயலாளர் முகம்மது அலி, பேராசிரியை சங்கரி, லெனின், ஆசிரியர் மாரியப்பன், சலீம், அயூப்கான் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநில குழு உறுப்பினர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு