தூய்மை பெண் பணியாளரை ‘அழைத்த’ அதிகாரிக்கு பெண்கள் செருப்படி: திருப்பதி அருகே பரபரப்பு

திருப்பதி: திருப்பதியில் தூய்மை பெண் பணியாளரை லாட்ஜூக்கு அழைத்த சூபர்வைசருக்கு பெண்கள் செருப்படி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை தூய்மை செய்யும் பணிகளை தனியார் அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இதில் தூய்மைப் பணிகளில் பெண்கள் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு சூபர்வைசராக குணசேகர் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அங்கு பணிபுரியும் பெண்களுக்கு தினமும் வேலை அளிக்க வேண்டுமென்றால தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்று வற்புறுத்தி வருவதாகவும், தனக்கு வேண்டியவர்களுக்கு சுலபமான பணியையும், தன்னிடம் ஒத்துவராதவர்களுக்கு கடினமான வேலையும் கொடுத்து பாலியல் தொல்லை அளித்து வந்தாராம்.இந்நிலையில் அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் சுசிலா என்பவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தொடர்ந்து நேற்று குணசேகர், சுசீலாவுக்கு போன் செய்து, திருச்சானூர் பகுதியில் லாட்ஜில் அறை எடுத்து வைத்துள்ளதாகவும், தனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். அவரும் ஒப்புக் கொண்டது போல பேசி, திருப்பதியில் உள்ள மகளிர் சங்க நிர்வாகிகளுக்கு தகவல் அளித்து அவர்களையும் அழைத்துக்கொண்டு திருச்சானூரில் உள்ள ஓட்டல் அறைக்கு சென்றனர். அப்போது அங்கு காத்திருந்த குணசேகரை கையும் களவுமாக பிடித்து செருப்பு மற்றும் கைகளால் தர்ம அடி கொடுத்து திருச்சானூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அளிப்பவர்களுக்கு இந்த நடவடிக்கை தக்க பாடமாக இருக்க வேண்டும் என்று மகளிர் சங்க நிர்வாகிகள் கூறினர்….

Related posts

நில முறைகேடு வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்றம்; சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்கு: முதல்வர் பதவிக்கு ஆபத்து

கடவுளை அரசியலில் இருந்து தள்ளிவையுங்கள் திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுவதா..? முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

பிரபல மலையாள சினிமா டைரக்டர் பாலச்சந்திர மேனன் மீது நடிகை பலாத்கார புகார்: குரூப் செக்சுக்கும் கட்டாயப்படுத்தினார்