தூய்மை பணியாளர் வாய்க்காலில் விழுந்து பலி

 

விருதுநகர், ஜூன் 29: தூய்மை பணியாளர் வாறுகாலில் விழுந்து உயிரிழந்தார். விருதுநகர் அருகே மாத்துநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஜெயக்குமார்(55). கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பாண்டியன் கிராம வங்கியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். மதுவிற்கு அடிமையாகியதால் தினசரி குடித்து விட்டு வீட்டிற்கு வருவதில்லை.

நேற்று முன்தினம் வழக்கம் போல் வங்கிக்கு வேலைக்கு சென்றவர் உடல்நிலை சரியில்லை என கூறி மதியம் வந்துள்ளார். மாலை வெளியே சென்ற நிலையில், நேற்று காலை விருதுநகர் புதுபஸ் நிலையம் எதிரில் உள்ள வாறுகாலில் விழுந்து தலையில் அடிப்பட்டு இறந்து கிடந்துள்ளார். அங்கிருந்தவர்கள் வெளியே தூக்கி, விருதுநகர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு சேர்த்தனர். பஜார் போலீசில் மனைவி காட்டுராணி அளித்து புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த புதிய முப்பெரும் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர் அரசு கல்லூரியில் 3ம் கட்ட கலந்தாய்வில் 131 மாணவர்கள் சேர்க்கை

மக்கள்குறைதீர் கூட்டத்தில் 548 மனுக்கள் மாயனூரில் இருந்து தென்கரை வாய்க்காலில் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரில் சாயக்கழிவுநீர் கலப்பா?