Wednesday, September 25, 2024
Home » தூய்மை பணியாளர்களுக்கு கயத்தாறில் மருத்துவ முகாம்

தூய்மை பணியாளர்களுக்கு கயத்தாறில் மருத்துவ முகாம்

by Ranjith

 

கயத்தாறு, செப். 25: கயத்தாறில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாமை பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை துவக்கி வைத்தார். தூய்மை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் உள்ளாட்சி பணியாளர்களின்உடல் நலனை பேணும் விதமாக அரசு சார்பில் மருத்துவ முகாம்கள் அடிக்கடி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கயத்தாறு பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம், கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது.முகாமை பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை துவக்கி வைத்தார்.

இதில் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு டாக்டர் காருண்யா கிரன், செவிலியர் சங்கீதா ஆகியோர் தலைமையிலான மருத்துவ பணியாளர்கள் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். முகாமில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி இணை ஒருங்கிணைப்பாளர் ராஜதுரை, வார்டு கவுன்சிலர்கள் நயினார் பாண்டியன், தேவி கண்ணன், வழக்கறிஞர் மாரியப்பன், ஜெனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

four × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi