தூய்மை பணியாளர்களுக்கு ஆயுள் காப்பீடு

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம் காக்களூர் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் சுரக்ஷா பீமா யோஜனா ஆகிய ஆயுள் காப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்களை ஊராட்சி தலைவர் சுபத்ரா ராஜ்குமார் தலைமையில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பெற்றுக் கொண்டார். இதில் ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயக்குமார், ஒன்றியக்குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், ஒன்றிய கவுன்சிலர்கள் எத்திராஜ், பூவண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காந்திமதிநாதன், வெங்கடேசன், முன்னோடி வங்கி மேலாளர் சீனிவாசன், துணைத் தலைவர் சிவராமகிருஷ்ணன், வார்டு உறுப்பினர்கள் ராகவன், பிரவீனா வேலுதம்பி, கீதாஞ்சலி சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்….

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு