அம்பத்தூர்: சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலத்தில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் 1457 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் பேரிடர், தொற்று காலத்திலும் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு தினமும் ரூ.391 ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில், துப்புரவு பணிகளை ஒதுக்கீடு செய்ய அதிமுக அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மார்ச் மாதம் அம்பத்தூர் மண்டல அலுவலகம் எதிரே தூய்மை பணியாளர்கள் பணி பாதுகாப்பு கேட்டு சாலை மறியல் நடத்தினர். அப்போது, மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தலுக்கு பிறகு கோரிக்கைகளை பரிசீலனை செய்வோம் என கூறி சமாதானப்படுத்தினர். நேற்று மதியம் 300க்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி, அம்பத்தூர் மண்டலத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் அம்பத்தூர் தொகுதி எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்களிடம், ‘’உங்களின் கோரிக்கைகளை உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கைள, எடுக்கப்படும்’ என்றார். இதனால் தூய்மை பணியாளர்கள் எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்ததுடன் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். …
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வாபஸ்
previous post