ஏரல், அக். 10: தூத்துக்குடி புதுக்குடி 3ம் மைலில் இந்து மருத்துவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முனியசாமி, சுடலைமாடசாமி கோயில் கொடை விழாவை முன்னிட்டு மக்கள் நலன், உலக ஒற்றுமை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் பங்கேற்றனர். சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காங். சமூக ஊடகப் பிரிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மாநில செயலாளர் முத்துமணி, கோயில் தர்மகர்த்தா மகாராஜன் மற்றும் முருகேசன், சந்திரன், பாஸ்கர், மாநகர மாணவர் காங். தலைவர் பிரவின்துரை, திமுக வட்ட பிரதிநிதிகள் தாமரலிங்கம், மாரிஸ்வரன், கார்த்திக், பெரியசாமி, வேலாயுதம், அரவிந்த், தென்னரசு, கோயில் கணக்கர் முத்துமாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.