தூத்துக்குடி பகுதியில் நாளை மின்தடை

தூத்துக்குடி, ஜூன் 9:தூத்துக்குடியில் நாளை (10ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தூத்துக்குடி நகர் மின்விநியோகம் செயற்பொறியாளர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி டவுண் மற்றும் சிப்காட் துணை மின்நிலையத்தில் உள்ள சிவன் கோவில் மற்றும் மருத்துவ கல்லூரி மின் தொடர்களில் நாளை (10ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வடக்கு ரதவீதி, மேல ரதவீதி, ரெங்கநாதபுரம், ரகுமத்துல்லாபுரம், மாதாகோவில்தெரு, எட்டையபுரம் ரோடு தொடர்ச்சி, கல்லூரிநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் 11 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை