தூத்துக்குடி டவுன் கண்ட்ரோல் ரூமில் புதிதாக சிசிடிவி கேமரா அமைப்பு

 

தூத்துக்குடி, செப் 2:தூத்துக்குடி டவுன் காவல் கட்டுப்பாட்டு அறையில் புதிதாக அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராவை எஸ்பி ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்தார். தூத்துக்குடி நகர பொதுமக்களின் நலன் கருதி காவல் துறை சார்பில் 310க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்தன. கடந்த சில ஆண்டுளுக்கு முன்னர் ஏற்பட்ட கலவரத்தின் போது சமூக விரோதிகளா டவுன் பகுதியில் இயங்கி வந்த 300க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்டன. இதன் பின்னர் ஒரு சில கேமராக்கள் மட்டுமே இயங்கி வந்தன.இந்நிலையில் கண்காணிப்பு கேமராக்கள் பழுதான நிலையில், தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் உள்ள காவல்நிலைய பகுதிகளில் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கவும், குற்றங்களை கண்டறியவும், கண்காணிக்கவும், விபத்து நடைபெறுவதை தடுக்கவும் முக்கிய இடங்களில் மீண்டும் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

இதில் தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில், டவுன் ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்ய பால்ச்சந்திரா மேற்பார்வையில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி நகர பகுதிகளில் 80 கண்காணிப்பு கேமராக்கள் மிகக் குறுகிய காலத்தில் சீரமைத்துள்ளனர். இதில் தென்பாகம் காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணித்திடும் வகையில் அவை மீண்டும் சரி செய்யப்பட்டது. இந்த சிசிடிவி கண்காணிப்பு திரை பொதுமக்களின் நலனுக்காக எஸ்பி ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்து பார்வையிட்டார். மீண்டும் 24 மணி நேரமும் இயங்கும் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு காவல்துறை அதிகாரிகள், போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு