தூத்துக்குடியில் வாலிபருக்கு கத்திக்குத்து நண்பர் கைது

தூத்துக்குடி, ஜூலை 24: தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்தவர்கள் ராஜேஷ் (28), வைரம் (30). நண்பர்களான இருவருக்கும் இடையே தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பஸ் நிலையத்தில் வைத்து திடீரென வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வைரம், ராஜேசை கத்தியால் குத்தினார். தகவலறிந்து மத்திய பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வைரத்தை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். கத்திக்குத்தில் காயமடைந்த ராஜேஷ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஸ்மார்ட் சிட்டி பஸ் நிலையத்தில் அரங்கேறும் இதுபோன்ற குற்றச்செயல்களை தடுக்க பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும். போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பயணிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி