தூத்துக்குடியில் ரத்த தான முகாம்

தூத்துக்குடி: போதையற்ற தமிழ்நாடு, போதையற்ற தூத்துக்குடி என்ற விழிப்புணர்வை வலியுறுத்தி தூத்துக்குடியில் ரத்த தான முகாம் நடந்தது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ரத்த தான கழகமும் இணைந்து தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் பள்ளியில் நடத்திய இம்முகாமிற்கு மாவட்டச் செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாநகரத் தலைவர் ஜேம்ஸ், தூத்துக்குடி புறநகர் தலைவர் ஜான்சன், முன்னிலை வகித்தனர். முகாமை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கிவைத்தார். இதில் மாநகராட்சி கவுன்சிலர் முத்துமாரி, மாவட்டச் செயலாளர் கார்த்திக், மாவட்ட பொருளாளர் மனோஜ், மாணவர் சங்க நிர்வாகிகள் கிஷோர், அஜ்மல், ஆவுடையப்பன், மாதவன், நேசமணி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். சுமார் 30க்கும் மேற்பட்டோர் ரத்ததான செய்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை