தூத்துக்குடியில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடி, ஜூன் 23: தூத்துக்குடியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. தூத்துக்குடியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறை சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. மதுவிலக்கு டிஎஸ்பி சிவசுப்பு தலைமை வகித்து துவக்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் ஜூடி, கால்டுவெல் பள்ளி தலைமை ஆசிரியர் ஜேக்கப்மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு பீச் ரோடு கால்டுவெல் பள்ளி முன்பிருந்து துவங்கிய இந்த பேரணியில் பள்ளி மாணவர்கள் போதைபஙபொருள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு அணிவகுத்து சென்றனர். திரேஸ்புரம், பூபால்ராயர்புரம் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகள் வழியாக இந்த விழிப்புணர்வு பேரணி சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. மதுவிலக்கு காவல்துறை அதிகாரிகள், போலீசார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை