தூத்துக்குடி,செப். 18: தூத்துக்குடியில் மாயமான புரோட்டா மாஸ்டரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி முகமது சாதலிபுரம் தெற்குத் தெருவை சேர்ந்தவர் முத்துவீரப்பன் (51). கடந்த 10 ஆண்டுளுக்கு முன்னர் மனைவி மற்றும் குடும்பத்தை பிரிந்த இவர், தனது அண்ணனான சுந்தரவேலின் குடும்பத்துடன் வசித்து வந்தார். மேலும் அங்குள்ள ஒரு நைட் கிளப்பில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். கடந்த ஜூலை 31ம் தேதி வீட்டில் இருந்து கடை வீதி சென்ற அவர் திடீரென மாயமானார். பின்னர் இதுகுறித்து சுந்தரவேல் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த வடபாகம் போலீசார், மாயமான முத்துவீரப்பனை தேடி வருகின்றனர்.