தூத்துக்குடியில் ஜூலை6ம் தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பு

தூத்துக்குடி, ஜூலை 3: தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தனசேகர் டேவிட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் முடிவின்படி புதிய பிஎன்எஸ், பிஎன்எஸ்எஸ், பிஎஸ்ஏ ஆகிய சட்டங்களை முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி வரும் 6ம் தேதி வரை தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் நீதிமன்ற பணிகளுக்கு செல்லாமல் இருப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி வரும் 5ம் தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணிக்கு தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Related posts

புதுக்கோட்டை புது தெருவில் வரத வீரஆஞ்சநேயர் கோயிலில் பாலாலயம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்மாய், குளங்களில் வண்டல், களிமண் எடுக்கலாம்

புதுகை மாவட்ட வள பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்