தூத்துக்குடியில் இன்றும், நாளையும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி, செப்.22: தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தில் இன்றும், நாளையும் (22, 23ம் தேதிகளில்) என இரு நாட்கள் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. நான் முதல்வன் திட்டத்தின் சார்பில் தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், சென்னை என்எஸ்இ அகாடமி ஆகியவற்றின் சார்பில் தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில்சங்க கூட்ட அரங்கில் வைத்து இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) என இரு தினங்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமில் தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரங்களிலுள்ள 53 நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் தங்களுக்குத் தேவையான தகுதியுடைய நபர்களை தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளனர். எனவே , வேலைவாய்ப்புக்காக காத்திருப்போர் இம்முகாமில் கலந்துகொண்டு அரிய இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தலைவர் தமிழரசு கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்