தூக்கு போட்டு முதியவர் சாவு

பெண்ணாடம், ஆக. 18: பெண்ணாடம் அடுத்துள்ள சவுந்தரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் முருகேசன்(56), விவசாயி இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். இவர் நீண்ட நாட்களாகவே நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் இவருக்கு அடிக்கடி உடல் வலி வந்து மருந்துகள் சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முருகேசன் தனது நிலத்தில் உள்ள மோட்டார் கொட்டகைக்கு சென்று அதன் அருகில் இருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் முகேஷ் ராஜா அளித்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த புதிய முப்பெரும் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர் அரசு கல்லூரியில் 3ம் கட்ட கலந்தாய்வில் 131 மாணவர்கள் சேர்க்கை

மக்கள்குறைதீர் கூட்டத்தில் 548 மனுக்கள் மாயனூரில் இருந்து தென்கரை வாய்க்காலில் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரில் சாயக்கழிவுநீர் கலப்பா?