பண்ருட்டி, ஜூன் 20: பண்ருட்டியை அடுத்த கந்தன்பாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவரது மனைவி குணா(50). இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று மீண்டும் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதையடுத்து வீட்டில் இருந்தவர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூக்குபோட்டு பெண் சாவு
previous post