துவரங்குறிச்சி, ஆக.14: துவரங்குறிச்சி அருகே 6 அடி நீளம் கொண்ட மலைபாம்பு பிடிபட்டது. திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அடுத்த பிடாரபட்டியில் குடியிருப்பு பகுதி அருகே 6 அடி நீளம் கொண்ட மலைபாம்பு ஒன்று கிடந்துள்ளது. அதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின்பேரில் நிலைய அலுவலர் மனோகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடியிருப்பு பகுதிக்குள் கிடந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.