துறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அடிப்படை வசதி செய்து தர பொதுமக்கள் எதிர்பார்ப்பு

துறையூர்,செப்.7: துறையூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் பொது மக்களுக்கு அடிப்படை வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர்.அடிப்படை வசதி செய்து தர பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. துறையூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்கு உட்பட்ட பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த சார்பதிவாளர் அலுவலகத்திற்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பத்திரப்பதிவு செய்ய வருகின்றனர். இந்நிலையில் பத்திரப்பதிவுக்கு வரும் மக்கள் பத்திரப்பதிவு நடைபெறும் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் அவர்களுக்கு அமர்வதற்கு என இருக்கை, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளதால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் பத்திரப்பதிவிற்கு பெண்கள், முதியவர்கள், ஊனமுற்றோர்கள் என வருகின்றனர். அவர்களுக்கு சார் பதிவாளர் அலுவலகத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். திருச்சி மாவட்டத்தில் அதிகமாக பத்திரப்பதிவு நடைபெறும் இடம் துறையூர் சார் பதிவாளர் அலுவலகம் என பெயர் பெற்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை