Thursday, June 27, 2024
Home » துப்பாக்கி, டைரி எங்கே?.. இலங்கை தாதாவின் கூட்டாளிகள் 2 பேரிடம் சிபிசிஐடி போலீசார் கிடுக்கிபிடி விசாரணை

துப்பாக்கி, டைரி எங்கே?.. இலங்கை தாதாவின் கூட்டாளிகள் 2 பேரிடம் சிபிசிஐடி போலீசார் கிடுக்கிபிடி விசாரணை

by kannappan

கோவை: துப்பாக்கி, டைரி எங்கே என கேட்டு இலங்கை தாதா கூட்டாளிகள் 2 பேரிடம் சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இலங்கை தாதா அங்கோட லொக்கா (35) என்பவர், கோவை சேரன் மாநகரில் பிரதீப் சிங் என்ற பெயரில் வசித்து வந்தார். இவர் கடந்த 2020, ஜூலை 4ம் தேதி மர்மமாக இறந்தார். இது தொடர்பாக இவரது காதலி அமானி தான்ஜி, சடலத்தை எரிக்க உதவிய மதுரை வக்கீல் சிவகாமி சுந்தரி, திருப்பூர் தியானேஸ்வரன் ஆகியோரை கோவை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.அங்கோட லொக்கா இறந்த பின்னர், அவரை ேதடி அவரது கூட்டாளியான இலங்கை அதுரகிரியா பகுதியை சேர்ந்த லடியா (எ) சனுக்கா தனநாயகா (38) என்பவர் கோவை வந்துள்ளார். இவர் அங்கோட லொக்காவின் காதலியை மிரட்டி, வீட்டில் இருந்த துப்பாக்கியை பறித்து சென்றார். அங்கோட லொக்கா போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். போதை மருந்து விவகாரம் தொடர்பாக ரகசிய டைரி போன்றவற்றையும் சனுக்கா தனநாயகா எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. போலீசார் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெங்களூரில், சனுக்கா தனநாயகா மற்றும் இவரது கூட்டாளி கோபாலகிருஷ்ணன் (46) என்பவரையும் கைது செய்தனர். இவர்கள் பெருந்துறை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார், கோவை மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். நேற்று மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் பாஸ்கர், 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார். இதை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் காவலில் எடுத்து கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரித்து வருகின்றனர். அங்கோட லொக்காவின் துப்பாக்கி மற்றும் அவரது வீட்டில் எடுத்து சென்ற டைரி எங்கே? போதை மருந்து கும்பலுடன் தொடர்பு உள்ளதா? போதை பொருளை தமிழகத்தில் சப்ளை செய்துள்ளனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கோட லொக்கா கூட்டாளிகள் யாரேனும் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் பதுங்கியுள்ளனரா என தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். விசாரணை முடிவில் பல்வேறு தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது….

You may also like

Leave a Comment

19 + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi