சென்னை: துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த முகமது காசிம்(30) என்ற பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சோதனையில் அவருடைய உடைமைகளுக்குள் 5 தங்க கட்டிகள், தங்கச்செயின் இருந்தது. அதன் எடை 517 கிராம், மேலும் அவரிடம் ரூ.6 லட்சம் மதிப்புடைய மின்னணு சாதனப்பொருட்கள் இருந்தன. மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்புடைய தங்கம் உள்ளிட்ட பொருட்களை அவரிடமிருந்து சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்….