துபாய் டென்னிஸ் சாம்பியன் ஷிப்: அரையிறுதியில் ஹாலெப், மார்கெட்டா

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் மகளிருக்கான துபாய் டூட்டி ஃப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில், செக் குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரூசோவா 7-5, 6-4 என்ற செட் கணக்கில் உக்ரைனின் தயானா யாஸ்ட்ரெம்ஸ்காவை வீழ்த்தினார். மற்றொரு கால் இறுதியில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் 6-4, 6-3 என துனிசியாவின் ஓனஸ் ஜாபூரை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். ரஷ்யாவின் வெரோனிகா குடெர்மெடோவா 6-2, 5-7, 6-4 என சுவிட்சர்லாந்தின் ஜில் டீச்மேனையும், லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோ 5-7, 7-5, 7-6 என செக்குடியரசின் பெட்ரோ கிவிட்டோவாவையும் வீழ்த்தினர். இன்று அரையிறுதியில் ஹாலெப்-ஆஸ்டாபென்கோ, மார்கெட்டா வோண்ட்ரூசோவா -வெரோனிகா குடெர்மெடோவா மோதுகின்றனர்….

Related posts

நீளம் தாண்டுதல் வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தரவரிசை அடிப்படையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

விம்பிள்டன் டென்னிஸ் 3வது சுற்றில் சின்னர் ராடுகானு வெற்றி

யூரோ கோப்பை கால்பந்து: கால்இறுதியில் பிரான்சிடம் போர்ச்சுகல் தோல்வி; சொந்த மண்ணில் ஸ்பெயினிடம் வீழ்ந்தது ஜெர்மனி