துபாயிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் கடத்தி வந்த ரூ.4.5 கோடி மதிப்புள்ள 9 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து பெரிய அளவில் விமானம் மூலம் சென்னைக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் தங்கம் சிக்கவில்லை. இதையடுத்து சுங்க அதிகாரிகள், துபாயிலிருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்திற்குள் ஏறி பரிசோதித்தனர். விமானத்தின் கழிவறைகளுக்குள் உள்ள தண்ணீர் தொட்டிகள் மற்றும் பயணிகள் அமரும் இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த பார்சல்களை கண்டுபிடித்தனர். அவற்றை பிரித்து பார்த்தபோது, தங்கப்பசைகள், கட்டிகள் இருந்தன. அதேபோல் சென்னை விமான நிலையத்தின் பயணிகள் வருகை பகுதியில் உள்ள கழிவறைகள் மற்றும் குப்பை தொட்டிகளில் சோதனை நடத்தினர். அங்கும் மறைத்து வைக்கப்பட்டிருந்த பார்சல்களை பறிமுதல் செய்தனர். அவைகளிலும் தங்கப்பசைகள், கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இதேபோல், விமானத்திலும் விமான நிலையத்தின் பயணிகள் வருகை பகுதிகளிலும் மொத்தம் 60 பார்சல்களை கைப்பற்றினர். இந்த பார்சல்களில் 9.02 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள், பசைகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 4.5 கோடி. ஒரே நாளில் ஒரே விமானத்தில் 4.5 கோடி மதிப்புடைய 9.02 தங்க கிலோ தங்கத்தை கடத்தி வந்த கடத்தல் ஆசாமிகள் ஒருவர் கூட சுங்கத்துறையிடம் சிக்காமல் தப்பியது சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டூல்ஸ்களுக்குள் கடத்திய 555 கிராம் தங்க ராடுகள்: துபாயிலிருந்து நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னைக்கு வந்த விமான பயணியான புதுக்கோட்டையை சேர்ந்த கோபாலசாமி (61) என்ற பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.  அப்போது அவர் தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறி விட்டு, கிரீன் சேனல் வழியாக வெளியே செல்ல முயன்றார். அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி உடமைகளை சோதனை செய்தனர். அவரது பையில் டூல்ஸ் பாக்ஸ் இருந்தது. அதில் ஸ்பேனர், சுத்தியல் உள்ளிட்ட டூல்ஸ்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன் உள்பகுதிக்குள், மொத்தம் 555 கிராம் 11 தங்க ராடுகள் இருந்தன. இதன் சர்வதேச மதிப்பு ரூ.26 லட்சம். அவற்றை பறிமுதல் செய்து பயணி கோபாலசாமியை கைது செய்தனர்….

Related posts

நீட் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

சிகிச்சைக்காக வந்தபோது நெருக்கம் ஏற்பட்டு உல்லாசம் தர்மபுரி ராணுவ வீரரின் மனைவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி கடத்தல்: மருத்துவமனைக்கு வந்த இளம்பெண்களையும் குறிவைத்து சீரழித்த ஊழியர் கைது