துணை சுகாதார நிலையம் கட்டும் பணிக்கு பூமி பூஜை

மோகனூர்: மோகனூர் ஒன்றியம் என்.புதுப்பட்டியில் உள்ள துணை சுகாதார நிலையத்தில், என்.புதுப்பட்டி, ஜங்கலாபுரம், மேலப்பட்டி, ராமஉடையானூர், குப்பம்பாளையம் ஆகிய 5 குக்கிராமங்களில் உள்ள 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மருத்துவ வசதிகளை பெற்று வந்தனர். இந்நிலையில், துணை சுகாதார நிலையத்தின் கட்டிடம் சிதிலமடைந்தது. பொதுமக்களின் கோரிக்கையை எடுத்து, இதனை இடித்து அகற்றி விட்டு, புதிய துணை சுகாதார நிலையம் கட்டுவதற்கான பூமி பூமி விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் பொன்னுசாமி, ராமலிங்கம் முன்னிலை வகித்தனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்