தீ விபத்தில் குடிசை வீடு சாம்பல்

ஸ்ரீபெரும்புதூர்:  ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ரம்பாக்கம் கிராமம், பல்லவா நகரை  சேர்ந்தவர் சிவமுருகன் (40), கூலி தொழிலாளி. நேற்று காலை சிவமுருகன், மனைவியுடன் வேலைக்கு சென்றார். அவரது  பிள்ளைகள், பாட்டியுடன் வீட்டின் அருகில் துணி துவைத்து கொண்டிருந்தனர்.  மதியம் 1 மணியளவில் திடீரென, சிவமுருகனின் குடிசை வீடு தீ பற்றி எரிந்தது.  தகவலறிந்து இருங்காட்டுகோட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள்  சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். அதற்குள் குடிசை வீடு மற்றும்  அங்கிருந்த பொருட்கள் எரிந்து சாம்பலானது. புகாரின்படி சோமங்கலம் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை