தீவைத்ததால் டூவீலர் எரிந்து சேதம்

 

கமுதி, ஜூலை 13: கமுதி அருகே கீழக்கொடுமலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி நாகூரான்(56). இவர் நேற்று முன்தினம் இரவு தனது தோட்டத்தில், இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். நேற்று பார்த்த போது, மர்ம நபர்கள் இவரது இருசக்கர வாகனத்தின் மீது தீ வைத்து எரித்தது தெரிய வந்தது, இதனால் இரு சக்கர வாகனம் முற்றிலும் எரிந்து நாசமாகி உள்ளது. இதுகுறித்து அபிராமம் காவல் நிலையத்தில் நாகூரான் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு